எமது VEDA கல்வி நிலையமானது 2011 ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு பொது அமைப்பாகும்.
வல்வை நகரில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பல்வேறுபட்ட இடப்பெயர்வுகளினாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட வல்வை மாணவர்களின் கல்வி நிலையினை சீர்தூக்கி ஓர் உன்னத வளர்ச்சிப்போக்கினை எற்படுத்தும் நோக்கிலே பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் வல்வை மக்களால் VEDA கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் மிகவும் குறைவான மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட VEDA கல்வி நிலையமானது படிப்படியாக வளர்ச்சிப் போக்கினை எய்தி இன்று 455 மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையமாக வல்வை மண்ணில் மிளிர்கின்றது.
அது மட்டுமன்றி VEDA கல்வி நிலையத்தில் பல பிரபல முன்னணி ஆசிரியர்களினைக் கொண்ட உயர்தரத்திற்கான கணித, விஞ்ஞான பிரிவுகளும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடமும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவது VEDA கல்வி நிலைய வளர்ச்சியினை எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு கல்விப் பாதையில் தன்னை உறுதியாக தடம்பதித்த எமது VEDA கல்வி நிலையத்தின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வல்வை வாழ் மக்களினதும், புலம்பெயர்வாழ் வல்வை மக்களினதும் பங்களிப்புக்கள் மகத்தானதாகும். இவர்கள் அனைவரினதும் பாரிய ஒத்துழைப்பு எமது VEDA கல்வி நிலையத்தின் பாரிய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிகோலியது எனக் கூறின் மிகையல்ல.
எமது கல்வி நிலையத்தைப் பொறுத்த வரையில் கொற்றங்கலட்டி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் முகவரியில் அமைந்துள்ளதே VEDA கல்வி நிலையமும் அதன் நிர்வாக மையமும் ஆகும்.
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஜ.இ) ஆதரவுடன் நடாத்தப்படும் VEDA கல்வி நிலையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 11 வரையான) வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகின்றன.
VEDA கல்வி நிலையத்தினால் க.பொ.த. (சா/த) கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வி வழிகாட்டலுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 01.06.2019 அன்று நடாத்தப்பட்டது.
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று கடந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 28 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் (100% சித்தி) க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.