A/L பரீட்சையை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/04/2020 (வியாழக்கிழமை)
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தினத்தை அண்மிக்கும்போது, அப்போதைய நிலவரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.